பனி, மேகமூட்டத்துடன் காணப்படும் சிங்கப்பூர்.. தொடரும் கனமழை – வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

genting-clouds-mbs-singapore
Zhangxin Zheng

சிங்கப்பூரில் நேற்று (பிப்.28) தொடங்கிய கனமழை இன்றும் பல்வேறு பகுதிகளில் நீடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் குடியுரிமை அல்லது PR வேண்டுமா? இது அவசியம் இல்லை – சில அம்சங்கள் இருந்தால் போதும்!

சிங்கப்பூரில் வெப்பநிலையானது 22 டிகிரி செல்ஸியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று ஆய்வகம் முன்னர் கணித்தது.

நேற்று மாலை 6:40 மணியளவில் மெரினா பே சாண்ட்ஸ் கோபுரங்கள் மூடுபனி மற்றும் மேகங்களால் சூழப்பட்ட நிலையில் காணப்பட்டது.

பிப்.28 என்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் அந்த அழகிய வானிலையை காண முடிந்தது.

பனிமூட்டமான சூழல் சிங்கப்பூரில் புதிதல்ல, அது எப்போதாவது மட்டுமே நிகழ்கின்றன.