ION ஆர்ச்சர்ட் மாலின் கழிவறையில் உள்ள கை உலர்த்தி (hand dryer) இயந்திரத்தை பயன்படுத்திய ஐந்து வயது சிறுமியின் விரலில் காயம் ஏற்பட்டது.
கடந்த திங்கள்கிழமை இரவு (டிசம்பர் 6) நடந்த இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் இடது ஆள்காட்டி விரலில் பாதிக்கும் மேல் துண்டிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனையில் 63 பேர் கைது
அவரது குடும்பத்தினர் மாலில் இரவு உணவு சாப்பிட சென்றனர், அதை அடுத்து சிறுமி பணிப்பெண்ணுடன் கழிவறைக்கு சென்றுள்ளார்.
பாதுகாப்பு கவர் இல்லாத அந்த இயந்திரத்தில் சிறுமி கையை வைத்த சில நொடிகளில், இடது கையின் ஆள்காட்டி விரல் உலர்த்தியின் விசிறி கத்திகளால் சிதைந்தது.
அவரது தந்தை, திரு நிக் சியா, கழிப்பறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாகவும், ஏதோ தவறாக நடந்துள்ளது என்பதை அறிந்ததாகவும் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.
பின்னர், சிறுமி காராவைக் காண குடும்பத்தினர் கழிப்பறைக்குள் விரைந்தனர். அப்போது அவரது மகள் விரல் சிதைந்து இருப்பது தெரிந்தது.
35 வயதான திரு சியா, தனது மகளுக்கு செவ்வாய் மற்றும் வியாழன் அன்று இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்ததாகக் கூறினார்.
இந்நிலையில், விரலில் கட்டப்பட்ட நிலையில் சிறுமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, கை உலர்த்தும் இயந்திரம் மாற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து மால் விசாரணை நடத்தி வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தொடர்பு கொண்டு வருவதாகவும் ION ஆர்ச்சர்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.