சிங்கப்பூரில் பணிபுரியும் தந்தை… 10ம் வகுப்பு மாணவி காதல் பிரச்சனையால் தற்கொலை

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். கணவர் சீமான், சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 16 வயதில் மகன் மற்றும் 15 வயதில் மகளும் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மனைவி பஞ்சவர்ணம் கோயிலுக்கு சென்ற வேளையில், மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ரோஷினி அறை மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காட்டுப்பன்றி தாக்கி இருவர் பாதிப்பு.. தேடிப் பிடிக்க 20 பேர் கொண்ட குழு தீவிரம்!

பின்னர், வீட்டில் மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து பஞ்சவர்ணம் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தேவகோட்டை பகுதி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதனை அடுத்து, ரோஷினியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், பஞ்சவர்ணம் முன்னர் ராமநாதபுரத்தில் உள்ள சிறுகம்பை ஊரில் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்துள்ளார்.

அப்போது அறியாத மொழி கிராமத்தை சேர்ந்த திலீப் என்ற வாலிபனுடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருநாள் ரோஷினி திலீப்புடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடி, அதை காவல்துறை கண்டு பிடித்தனர்.

பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து பஞ்சவர்ணம் மகன், மகளை அழைத்துக்கொண்டு தேவகோட்டை பகுதிக்குக் குடியேறினார்.

இந்நிலையில் காதலனை பிரிய முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

காதலன் திலீபன் மீதும் பல திருட்டு வழக்கு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனி திருச்சி – சிங்கப்பூர் இடையே தினசரி விமானங்களில் பறக்கலாம்!!