சிங்கப்பூரில் வேலை செய்து வரும் ஊழியரின் வீட்டில் அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பில் சுமார் 1 வருடம் கழித்து 4 பேர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தமிழக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Work pass அனுமதியில் குளறுபடி; அதிரடி அமலாக்க சோதனை… சிக்கிய ஊழியர்கள்
சிங்கப்பூரில் வேலை செய்து வரும் தேனி அருகே கொடுவிலார்பட்டியை பகுதியை சேர்ந்தவர் சுந்தர் பிரசாத். இவர் மனைவி ஹேமா குடும்பத்துடன் போடி கிருஷ்ணாநகரில் வசித்து வருகிறார்.
கடந்த ஆண்டு சுந்தர் பிரசாத் அம்மா இறந்துள்ளார், அதனால் தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு அவர் அங்கு சென்றுள்ளார். ஒருவாரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டு, பீரோவில் 25½ பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் அது குறித்துபுகார் செய்யப்பட்டு போலீசார் அவர்களை தேடி வந்தனர், தற்போது இதன் தொடர்பில் ஜேசு அருள், பாலகுருசாமி, செந்தில்குமார், தமிழ்செல்வன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 7 பவுன் நகையை மீட்டதாக போலீசார் கூறியுள்ளனர். விசாரணை தொடர்கிறது.