இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகஸ்ட் 11-ம் தேதி பாங்காக் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கையில் அதிரடியாக உயர்ந்த பணவீக்கத்தால் எரிவாயு,உணவுப் பொருட்கள்,அத்தியாவசியப்பொருட்கள் போன்றவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்தது
.இலங்கை மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பதவியை ராஜினாமா செய்யுமாறு ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடினர்.மக்களை கட்டுப்படுத்த கோத்தபய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியடைந்தது.
மக்களின் குரல் நாளுக்குநாள் ஓங்கியதை அடுத்து இவர் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறி, ஜூலை 14ம் தேதி மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் வந்துள்ளார்.மனைவியுடன் சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள ராஜபக்சா சிங்கப்பூரை விட்டு தாய்லாந்து தலைநகருக்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இரண்டு பத்திரிக்கை ஆதாரங்கள் வெளியிட்டுள்ளன.
ராஜபக்சேவின் பயணத் திட்டங்கள் குறித்து தங்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை என்று தாய்லாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.அவர் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இது உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.
நாட்டை விட்டு ஓடிய ராஜபக்சே, ஜூலை 14ல் சிங்கப்பூரை அடைந்தார்.அவர் மறுநாள் மின்னஞ்சல் மூலம் இலங்கையின் ஜனாதிபதி பதவியை உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்தார்.
நாட்டை விட்டு ஓடிய ராஜபக்சே, ஜூலை 14ல் சிங்கப்பூரை அடைந்தார்.அவர் மறுநாள் மின்னஞ்சல் மூலம் இலங்கையின் ஜனாதிபதி பதவியை உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 1ஆம் தேதி சிங்கப்பூரில் ராஜபக்சேவுக்கு எந்தவித சலுகைகளும், விலக்குகளும், விருந்தோம்பலும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.