புதிய துறைக்கு மாறிய ஊழியர்கள்! – முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வது துறைக்கு நல்லது!

Singapore unemployed helping
(Photo: MOM/FB Page)

சிங்கப்பூரில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பசுமைப் பொருளாதாரத் துறைக்கு தங்கள் பணிக்காலத்தில் மாறுகின்றனர்.சிங்கப்பூர் ஊழியர் அமைப்பு புதிய வாய்ப்புகளை ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றன.

வாழ்க்கைத் தொழில் மாற்றுத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை அமைப்பு வழங்கி வருகிறது.ஊழியர்கள் புதிதாக மாறியுள்ள பசுமைப் பொருளாதாரத் துறையில் சிறந்து விளங்க முயற்சி செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

அத்துறையின் உள்கட்டமைப்பு,தொழிலாளர் பயிற்சி,மேம்பாடு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.புதியத் துறையில் சிறப்பான பயிற்சியுடன் வேலை செய்தால் அதன் வளர்ச்சி பன்மடங்கு விரைவாகும்.

ஊழியர்களின் தொழில் பயிற்சியானது சிறிய,நடுத்தர நிறுவனங்களை அந்த மாற்றத்துக்கு தயார் செய்ய பயனுள்ளதாக அமையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.