ரமலான் நோன்பை முன்னிட்டு சுமார் 2 டன் அரிசி நன்கொடை..!

ரமலான் நோன்பை முன்னிட்டு சுமார் 2 டன் அரிசியை சிங்கப்பூரில் குறிப்பிட்ட சில பள்ளிவாசல்களுக்கு இந்து அறக்கட்டளை வழங்க இருக்கிறது.

பலதரப்பட்ட சமூக மக்கள் வாழும் சிங்கப்பூரில் மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஓங்கவும், சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றதுடன் இணைந்து இரண்டாவது ஆண்டாக இந்த முறையும் இந்து சமய அறக்கட்டளை இந்த அன்பளிப்பை வழங்க இருக்கிறது.

அன்-நஹ்டா (An-Nah’dah) பள்ளிவாசல், அப்துல் கஃபூர் (Abdul Gafoor) பள்ளிவாசல், பா-அல்வி (Ba’alwi) பள்ளிவாசல் மற்றும் ஜாமியா சூலியா (Jamia Chulia) பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு ரமலான் நோன்பு அரிசி நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.