ஜனவரி 17- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

Photo: Sri Mariamman Temple

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவிட்- 19 கட்டுப்பாடுகளுக்கு இணங்க, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கீழ்வரும் மாற்றங்கள் ஜனவரி 17- ஆம் தேதி திங்கள்கிழமை பௌர்ணமி நாளன்று பொருந்தும்.

நடைபாதை கூரையின் மீது விழுந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணம்

இரவு 08.30 PM மணி முதல் இரவு 10.00 PM மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பால் குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/Services/MassEvent எனும் இணையதளத்தில் பதிவுக் கட்டணம் செலுத்தலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குடத்தை செலுத்திவிடுவார்கள்.

பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பௌர்ணமி பூஜையைப் பார்க்க இயலாது. மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு தர, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையில் நிற்காமல், தொடர்ந்து நடந்தவாறு வழிபாட்டில் ஈடுபடுமாறு கோயில் நிர்வாகம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.

புக்கிட் படோக் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

முதியோர், இளம் பிள்ளைகள், உடற்குறையுள்ளோர் ஆகியோர் வீட்டிலிருந்தவாறு வழிபாட்டில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர். பௌர்ணமி பூஜையின் நேரலையை https://heb.org.sg எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையப் பக்கத்தில் காணலாம்.

இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் நாடுகிறோம். கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.