ஹாலந்து வில்லேஜில் நடந்த சண்டையில் தொடர்புடைய 20 வயதுமிக்க இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி இரவு 11.37 மணியளவில் 1 லோரோங் மாம்போங்கில் நடந்த இந்த சண்டையில் 22 வயது ஆடவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக முன்னர் செய்தி வெளியிட்டோம்.
சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில் ஆடவர்கள் குழுவாக சண்டையிடுவதைக் காண முடிந்தது, அவர்களில் ஒருவர் தரையில் விழுவதையும் உதை வாங்குவதையும் அதில் காணலாம்.
புதிய அறிக்கையின்படி, 20 வயதுடைய இருவர் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது
இந்த வழக்கு தொடர்பாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக அவர்களைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.