ஹாலந்து வில்லேஜில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 8) இரவு பலரிடையே சண்டை ஏற்பட்டது, அதில் 22 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அன்று இரவு 11.37 மணிக்கு 1 லோரோங் மாம்போங்கில் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய வழக்கு குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களின் வழி பரவி வரும் வீடியோவில், சாலை நடைபாதையில் பலர் தகராறில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது. ஒருவர் தரையில் விழுந்து உதைபடுவதையும் வீடியோ வழியே காணலாம்.
மேலும் இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சண்டையில் ஈடுபட்டது சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களா என்று பலர் கருத்து தெரிவித்தனர். சிலர் ஆம் என்றும், சிலர் இல்லை என்றும் கூறுகின்றனர்.