உன்னை நீயே அறைந்துகொள்! – 63 வயது மூதாட்டியின் இரக்கமற்ற செயலினால் காயமடைந்த பணிப்பெண்!

indian-origin-singapore-jailed

இல்லப் பணிப்பெண்ணை தன்னைத் தானே அறைந்து கொண்டு ‘அறிவில்லை’ எனத் தனக்குத் தானேச் சொல்லிக் கொள்ளுமாறு வற்புறுத்திய மூதாட்டிக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.63 வயது மூதாட்டி தன் வீட்டு வேலைகளைச் செய்ய நியமித்திருந்த பணிப்பெண்ணை ஒவ்வொரு நாளும் துன்புறுத்திஇருக்கிறார்.

மூதாட்டியின் எல்லையற்ற துன்புறுத்தலைக் கண்டு கொதித்தெழுந்த அண்டை வீட்டுக்காரர் காவல்துறையில் புகாரளித்தார். புகார் அடிப்படையில் தொடர்புடையவரின் வீட்டைத் தேடிச் சென்ற காவல்துறை அதிகாரிகளிடம் மூதாட்டி வம்பு செய்துள்ளார்.

மூதாட்டியைக் கட்டுப்படுத்திப் பின்னர் பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணை மூதாட்டியிடம் இருந்து மீட்டு அழைத்துச் சென்றனர்.மூதாட்டி அங் போ கியோ வேண்டுமென்றே பணிப்பெண்ணை துன்புறுத்தி காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டது.

மூதாட்டியின் செயல்கள் அனைத்தும் அவரது வீட்டில் உள்ள ரகசியக் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளன.பணிப்பெண்ணின் தலை சுவரில் மோதிக் காயமடைவதற்குத் தான் காரணமாக இருந்ததை மூதாட்டி ஒப்புக்கொண்டார்.