நள்ளிரவில் ஹூகாங்கில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமிருந்து தொண்டுக்காக நன்கொடை கோரியதாகக் கூறப்படும் இரண்டு படைவீரர்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை முடித்துள்ளது சிங்கப்பூர்க் கடற்படை (The Republic of Singapore Navy – RSN).
பாதுகாப்பு அமைச்சகம் (MINDEF) ஜூலை 21 அன்று ஒரு முகநூல் பதிவில், அந்த நபர்கள் குடிபோதையில் அவ்வாறு செய்ததாக விசாரணைகள் வெளிப்படுத்தியதைக் குறிப்பிட்டது. மேலும் இரண்டு ராணுவ வீரர்களும் தங்கள் செயல்களுக்கு வருத்தம் தெரிவித்திருந்தனர்.
RSN வீரர்கள் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது விசாரணைகள் நடைபெற்றுள்ளது என்றும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் நிதி அபராதங்களும் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.