சிங்கப்பூர் குடிமகனாக விரும்பும் நிரந்தரவாசிகள் அனைவரும் கட்டாயம் தேசிய சேவையாற்றி இருக்க வேண்டும்.
திறமையானவர்களுக்கு தேசிய சேவையை தள்ளிப்போடுவதை எளிதாக்க வேண்டும் அல்லது நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வை கடந்த மாதம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் நிலையில், புதிய குடிமக்களையும் நிரந்தரவாசிகளையும் தேசிய சேவையில் சேர்க்காதிருந்தால் அது சிங்கப்பூர் ஆயுதப்படையின் மனிதவளத் தேவைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்திருக்கும்,” என்று நாடாளுமன்றத்தில் டாக்டர் இங் கூறினார்.
அத்தகைய தேசிய சேவையாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் புதிய குடிமகன்கள் என்றும் எஞ்சியோர் நிரந்தரவாசிகள் என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூர் ஆயுதப்படைக்கும் நமது தேசிய தற்காப்புக்கும் தேசிய சேவையே அடித்தளமாக விளங்குகிறது.
பிறப்பு, பதிவு அல்லது வம்சாவளி எதுவாக இருப்பினும், இளம் குடிமகன்கள் அனைவருக்கும் தேசிய சேவை கடமைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும் என அமைச்சர் இங் தெளிவுபடுத்தினார்.
ஒவ்வோர் ஆண்டிலும் சராசரியாக 3,400 புதிய குடிமகன்கள் தேசிய சேவையாற்றுகின்றனர் என்றார்.