கோவிட்-19 வைரஸ் தொற்று உலகெங்கிலும் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மைதான்.பெருந்தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு துறைகளில் ஊழியர்கள் வேலையை இழந்து அவதிப்பட்டனர்.ஆனால் சில தொழில்நுட்பம் தொடர்பிலான துறைகள் வீட்டிலிருந்தவாறே ஊழியர்கள் பணிபுரியுமாறு வழிநடத்தின.
கணினியை வைத்துக்கொண்டு வீட்டில் மெய்நிகர் வாயிலாக அலுவலகம் தொடர்பான சந்திப்பு போன்றவற்றில் ஊழியர்கள் பங்கேற்றனர்.இது போல சிங்கப்பூரில் ஒருவர் வீட்டிலிருந்தபடியே வேலை தொடர்பான வீடியோ காலில் விவாதித்துக் கொண்டிருந்த போது அவரது மனைவி செய்த செயல் TikTok செயலியில் வைரலாகி வருகிறது.கணவர் வேலைத் தொடர்பான அழைப்பில் இருக்கிறார்.
யாருக்கும் இடையூறு இல்லாமல் அந்தப் பக்கம் உள்ள கைக்கடிகாரத்தை எடுக்க மனைவி முயற்சி செய்துள்ளார்.தரையில் தவழ்ந்து சென்றால் யாருக்கும் தெரியாது என்று எண்ணி அவர் தவழ்ந்து செல்ல அந்தக் காட்சியும் வீடியோவில் பதிவாகி விட்டடது.
அது பார்ப்பதற்கும் மிகவும் நகைச்சுவையாய் இருந்ததால் கணவர் TikTok-ல்வீடியோவை பதிவேற்றினார்.பதிவேற்றி மூன்றே நாட்களில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை வீடியோப் பெற்றுள்ளது.
கிட்டத்தட்ட 19,000 லைக்குகள் இதுவரை குவிந்துள்ளன.மனைவி தவழ்ந்து செல்வதைக் வீடியோவில் பார்த்தும் சற்றும் கவனம் சிதறாமல் வாடிக்கையாளர்களுடன் தொடந்து பேசிக்கொண்டிருந்த கணவரை tiktok பயனர்கள் பலரும் பாராட்டினர்.