மனைவியுடன் தகராறு! மாடியிலிருந்து வீசினேன்! – 14வது மாடியிலிருந்து தூக்கி வீசிய கோபக்கார கணவருக்குச் சிறை!

மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவர் ஆத்திரத்தில் 14வது மாடியில் இருந்து மிதிவண்டியை வீசியுள்ளார்.பொறுமையிழந்து மற்றவருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் மிதிவண்டியை வீசிய குற்றத்திற்காக அவருக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுவா சூ காங் கிரசென்ட் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் முகம்மது என்பவர் மற்றவர் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் விதமாக மிதிவண்டியை தூக்கி எறிந்ததை ஒப்புக் கொண்டார்.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி மாலையில் வீட்டில் முகம்மதுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே புகைச்சல் ஆரம்பித்தது.

அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு எந்த ஆடையை அணிவது என்ற விவாதம் தொடர்பில் இருவரும் மோதிக் கொண்டனர்.வாக்குவாதம் முற்றிப்போகவே,ஆத்திரமடைந்த முகம்மது வீட்டை விட்டு வெளியேறினார்.

அப்போது அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ எடையுள்ள மிதிவண்டியை தூக்கிக் கீழே வீசினார்.பொதுமக்கள் புழங்கும் பகுதியில் மிதிவண்டி வீசப்பட்ட தகவலை காவல்துறைக்கு தெரிவித்தனர்.

காவல்துறையினர் விசாரணை செய்த போது ஆரம்பத்தில் தான் அவ்வாறு செய்யவில்லை என்று கூறிய முகம்மது பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.