கண்ணம் சுருங்கிட நீயும்,மீசை நரைத்திட நானும் ! – தீப்பிடித்த வீட்டிற்குள் துணிச்சலாக நுழைந்து மனைவியை காப்பாற்றிய முதியவர்!

scdf woodlands street

சிங்கப்பூரில் மனைவியைக் காப்பாற்ற தீப்பிடித்த வீட்டில் கணவன் துணிச்சலுடன் நுழைந்தார்.நடக்கவே சிரமப்படும் 61 வயதான அப்துல் ஹம்சா மிடி என்பவர் உட்லண்ட்ஸ் தெரு 81,பிளாக் 806இன் ஐந்தாவது மாடியில் உள்ள அவர்களது வாடகை வீட்டில் தீப்பிடித்து எரிந்த போதிலும் மனைவியைக் காப்பாற்ற வீட்டிற்குள் விரைந்தார்.

அவரது மனைவி அமினா காமிஸ் பூனையுடன் சமையலறையில் இருந்தார்.தீ வீடு முழுவதுமாக பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் வீட்டிற்குள் நுழைய சிறிது பயமாக இருந்ததாக அவர் கூறினார்.இருப்பினும் உள்ளே மனைவியும் பூனையும் சிக்கித் தவிப்பதால் அவர்களைக் காப்பாற்ற துணிந்து நுழைந்ததாகக் கூறினார்.

56 வயதான மனைவி கணவரைப் பிடித்துக்கொள்ள இருவரும் ஒன்றாக வீட்டிலிருந்துத் தப்பினர்.அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த நூறு பேர் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

அதிகாலை 2 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட்டது.சிறிய காயங்களுடன் அவரது மனைவி தப்பித்து விட்டார்.