LGBT+ நபர்களுக்கு எதிராக பேசிய Hwa Chong Institutionஇன் ஆலோசகர் – போலீஸ் விசாரணை !

hwa chong institution

Hwa Chong Institution இல் நடந்த ஒரு சம்பவம் போலீஸ் விசாரணையின் கீழ் வந்துள்ளது. லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம் மற்றும் திருநங்கை (LGBT+) நபர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வகையில் பள்ளி ஆலோசகர் பேசியதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார்கள் பதிவு செய்யப்பட்டன, ஆனால் அவற்றை யார் கொடுத்தது என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அந்த ஆலோசகர் ஓரினச்சேர்க்கையாளர்களில் பெரும்பாலோர் paedophileகள் என்றும் அவர்களில் பெரும்பாலோருக்கு குடல் புழுக்களால் பிரச்சினைகள் இருப்பதாகவும்  ஆதாரமற்ற கூற்றுகளை முன்வைத்தார். அவர் எடுத்த அந்த பிரெசென்டேஷன் ஸ்லைடுகள் பின்னர் ஆன்லைனில் பரப்பப்பட்டது.

இப்படி ஒரு பேச்சு நடத்தியதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, ஆலோசகர் கண்டிக்கப்பட்டதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் பிரெசென்டேஷனின் உள்ளடக்கத்தை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் பள்ளி தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.