சிங்கப்பூரில் சிகரெட்டை சாக்லேட் பிஸ்கட் குச்சிகளாக சிலர் அனுப்ப முயற்சிக்கும் வித்தியாசமான நடவடிக்கையை பற்றி ICA கூறியுள்ளது.
இது குறித்து ICA தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு… பாதிக்கப்படும் சிங்கப்பூர் வாசிகள்!
சிலர் இதுபோன்ற தில்லாலங்கடி ஆட்டத்தில் ஈடுபடுவதை சாங்கி ஏர்ஃப்ரைட் நிலையத்தில் உள்ள ICA அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஸ்னாக்ஸ் பெட்டிகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை மறைத்து, அதிகாரிகளிடம் இருந்து தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இது போன்று ஈடுபடுவதாக அது சுட்டிக்காட்டியது.
என்ன பலே திட்டம் போட்டாலும், ICA சோதனைகளில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது என்பதை இதுபோன்ற தவறிழைப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.