சிங்கப்பூரர்கள் ஆண்டிறுதியில் வெளிநாட்டுப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தால் உடனடியாக பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு குடிவரவு சோதனைச்சாவடி ஆணையம் (ICA) வலியுறுத்தியுள்ளது.
ஆறுமாதம் செல்லுபடியாகும் மற்றும் காலாவதியான பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்களை ஆணையம் குறிப்பிட்டுக் கூறியது.ஆண்டிறுதியில் குவியும் பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை இது தவிர்க்கும் என்று ஆணையம் தெரிவித்தது.
பயணிகளின் பயணத் தேவைகளுக்கேற்ப விண்ணப்பங்களை செயல்முறைப்படுத்த கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்று குறிப்பிட்டது.
இரண்டு ஆண்டுகள் முடங்கியிருந்த விமானப் போக்குவரத்து, எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் பயணங்கள் அதிகரித்ததிலிருந்து பாஸ்போர்ட்களுக்கான விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.அவற்றைச் சமாளிக்க ICA திணறியது.
தாமதமாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு உரிய நேரத்தில் பாஸ்போர்ட்கள் கிடைக்காமல் போகலாம் என்று ஆணையம் எச்சரித்தது.ICA-இன் இணையதளம் அல்லது செயலியில் கூட பாஸ்போர்ட் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.பாஸ்போர்ட் தயாராகிவிட்டதா என்பதையும் இணையதளத்தில் பார்க்கலாம்.