சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கை: 25 பேர் கைது

illegal gambling gambas crescent
Singapore Police Force

காம்பாஸ் கிரசன்ட் வட்டாரத்தில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் ஜூலை 20 அன்று கைது செய்யப்பட்ட அவர்களில், 13 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவர்.

இறந்து கிடந்த போலீஸ் அதிகாரி.. “வேலையிடத்தில் பாகுபாடு, துன்புறுத்தல்” – பதிவு வெளியிட்டு மரணம்

இதில் S$19,752 ரொக்க பணம், 11 கைப்பேசிகள் மற்றும் கேமிங் தொடர்பான உபகரணங்களை உட்லண்ட்ஸ் போலீஸ் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியதாக போலீஸ் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சட்டவிரோத கேமிங் அல்லது பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் S$200,00 வரை அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

இந்தியரை காணவில்லை – பொதுமக்களிடம் உதவி கோரும் சிங்கப்பூர் போலீசார்