சட்டவிரோதமாக உணவு பொருட்களை இறக்குமதி செய்ததாக ஆடவர் ஒருவருக்கு $15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறைச்சி மற்றும் கடல் உணவு பொருட்களை அவர் இறக்குமதி செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியாவில் சிறுயை நாசம் செய்ததாக சிக்கிய மதுக்கடை உரிமையாளர்
மன் வீ காங் என்ற அவருக்கு $15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 10 அன்று, பாசிர் பஞ்சாங் ஸ்கேனிங் நிலைய குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரிகள், சரக்குகளை ஸ்கேன் செய்த போது அதில் முரண்பாடுகளைக் கண்டறிந்தனர்.
பின்னர் அதனை சோதித்தில் முறையான இறக்குமதி அனுமதியின்றி, சீனாவில் இருந்து அதனை இறக்குமதி செய்தது தெரியவந்தது.
பின்னர் இந்த வழக்கு விசாரணைக்காக SFA-க்கு அனுப்பப்பட்டது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்