13 வயது சிறுமியிடம் பாலியல் உறவுக்குப் பணம் கொடுத்துப் பழக்கிய ஆடவருக்கு சிறை

(Photo: Getty)

பொறி­யி­யல் நிறு­வ­னம் ஒன்­றில் திட்­டப்­பணி குழுத்­த­லை­வ­ராக பணியாற்றிய நிக் சோங் செங் சியோ (வயது 24) பதிமூன்று வயது சிறுமியிடம் பாலியல் சேவைக்கு பணம் கொடுத்து பழக்கியதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் CharIW என்ற உரையாடல் செயலி மூலம் இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாவும், பின்னர் வாட்சப் செயலியில் உரையாடல் தொடர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பின்னர், ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பும்படி சோங் கேட்டதாகவும் அந்த சிறுமியும் தயங்காமல் அனுப்பியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 13 மாதங்களாக மூடப்பட்டிருக்கும் சிங்கப்பூர்-மலேசியா எல்லை – ஊழியர்கள் அவதி!

பின்னர், அந்த சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபடவும் அதற்க்கு பணம் தருவதற்கும் சோங் விரும்பியதாக கூறப்பட்டுள்ளது.

அதற்க்கு அப்பெண்ணும் ஒப்புக்கொண்டு அந்த சமயத்தில் தனக்கு 13வயது என்பதையும் அவரிடம் கூறியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2019 பிப்ரவரி வரை அனைத்து மாதங்களிலும் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்தப் பெண் பலருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

14 வயதிற்குட்பட்ட சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் 20 ஆண்டு வரை சிறை, அபராதம் மற்றும் பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

ஆபாசப் புகைப்படங்களை வைத்திருந்ததற்க்காக ஆறுமாதம் சிறை மற்றும் S$200,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் – அதன் மதிப்பு S$2.3 மில்லியனுக்கும் அதிகம்