சிங்கப்பூர் தலைமை நீதிபதியுடன், இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திப்பு!

சிங்கப்பூர் தலைமை நீதிபதியுடன், இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திப்பு!
Photo: SG Courts

 

 

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வந்துள்ள இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சிங்கப்பூர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனை நேரில் சந்தித்துப் பேசினார்.

வெளிநாட்டு பணிப்பெண்ணின் மோசமான செயல்.. அதிர்ச்சியில் நிலைகுலைந்த முதலாளி மகள்

அத்துடன், நீதிமன்றங்களின் செயல்பாடுகள், வழக்கு விசாரணை செய்யும் விதம், தொழில்நுட்பங்கள் குறித்து இருவரும் கலந்தாலோசித்தனர். இதைத் தொடர்ந்து, நீதித்துறை ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நீதிபதிகளும் கையெழுத்திட்டனர்.

சிங்கப்பூருக்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. இந்திய ஊழியர்களுக்கு அடிக்கும் அதிஷ்டம்

இந்த நிகழ்வின் போது, இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு சென்ற சிங்கப்பூர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்த வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.