இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வர தயாராகும் பயணிகள்: சுமார் 1,000க்கு மேற்பட்ட பயணிகளுக்கு அனுமதி

(Photo: AFP/Roslan Rahman)

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க சுமார் 1,126 பயணிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான VTL ஏற்பாட்டின்கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட சில நாடுகளுக்கான சிங்கப்பூர் வருகை அனுமதி விண்ணப்பங்கள் கடந்த திங்களன்று தொடங்கியது. மேலும் வரும் நவம்பர் 29 அன்று பயணிகள் சிங்கப்பூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி!

இதற்கிடையில், திங்கட்கிழமை 23.59 மணி நிலவரப்படி, இந்தோனேசியாவிலிருந்து 2,681 பயணிகள் VTL-ன் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 2,068 பேர் குறுகிய கால வருகையாளர்கள்.

மேலும், பின்லாந்தில் இருந்து ஒன்பது பயணிகளுக்கும், ஸ்வீடனில் இருந்து 19 பயணிகளுக்கும் VTP பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, மலேசியாவில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட பயணிகள் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பாடு செய்யப்பட்ட VTL திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) செவ்வாயன்று இதனை தெரிவித்தது.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவை’- அறிவிப்பை வெளியிட்டது ‘FlyScoot’ நிறுவனம்!