சீனப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் இந்திய குடும்பம் ஒன்றின் வீடு அலங்காரங்களுடன் ஜொலிக்கிறது.
11 பொங்கோல் ஃபீல்டு வாக்கில் அமைந்துள்ள அந்த அலங்கார வீட்டை ஸ்டாம்ப் பகிர்ந்து கொண்டுள்ளது.
சிங்கப்பூருக்கு 2021இல் 330,000 சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை – 2ம் இடத்தில் இந்திய பயணிகள்
ஸ்டாம்ப் நிரூபர் பகிர்ந்துள்ள அந்த புகைப்படங்களில், ஆபரணங்கள், பாடல் மற்றும் அவரது வீட்டு வாசல் மற்றும் லிப்ட் லாபியிலும் அலங்காரங்கள் ஜொலிக்கிறது.
“சீனர்கள் Lunar புத்தாண்டைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், இந்தியர்களாகிய நாமும் கொண்டாடுகிறோம்” என்று அவர் ஸ்டாம்பிடம் தெரிவித்தார்.
“அலங்காரங்களை ஏற்படுத்தியது இதுவே முதல் முறை, ஆனால் இனிமேல் ஒவ்வொரு வருடமும் அதைச் செய்ய திட்டமிட்டுள்ளோம்.”
“சிங்கப்பூர் ஒரு பன்முக கலாச்சாரம் கொண்ட சமூகமாக இருப்பதால், நாங்கள் வெவ்வேறு கலாச்சாரங்களை அறிந்து மற்றும் அதனை கற்றுக்கொண்டோம்” என்று நிரூபர் கூறினார்.
சிங்கப்பூர் போலீஸ் அதிரடி நடவடிக்கை: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 15 பேர் சிக்கினர்