சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கா.சண்முகத்துடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கா.சண்முகத்துடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!
Photo: Minister Dr Jaishankar

 

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (அக்.21) காலை 11.00 மணிக்கு சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகத்தை நேரில் சந்தித்துப் பேசினார்.

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு.. 7மீ நீளம், 140 கிலோ எடை – நகர முடியாமல் சிக்கியது

இந்த சந்திப்பின் போது, இந்தியா- சிங்கப்பூர் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது, பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கா.சண்முகத்துடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!
Photo: Minister Dr JaiShankar

முன்னதாக, நேற்று (அக்.20) சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்-கை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினார்.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கா.சண்முகத்துடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!
Photo: Minister Dr S.Jaishankar

அப்போது, வெளியுறவுத்துறைக் கொள்கைகள், வர்த்தகம், சரக்கு இறக்குமதி, ஏற்றுமதி, உலகளாவிய பொருளாதாரம், நிலை, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவைக் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.