ஜூரோங் வெஸ்டில் உள்ள வேலையிடத்தில் பின்னால் வந்த வாகனம் மோதியதில் 33 வயதான இந்திய ஊழியர் உயிரிழந்தார்.
அந்த ஊழியர் தாம் ஓட்டும் டிப்பர் லாரியில் இருந்து பொருட்களை இறக்குவதற்கு ஆயத்தம் ஆகிகொண்டிருந்தார்.
அப்போது கட்டுமானத் தளங்களில் பொருட்களைத் ஏற்ற / இறக்க பயன்படும் வீல் லோடர் வாகனம் பின்பக்கமாக வந்து மோதியதாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று கூறியுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த திங்கள்கிழமை மதியம் 3.40 மணியளவில் 1 புரோ க்ளோஸில் நடந்ததாகவும், இது குறித்து விசாரித்து வருவதாகவும் MOM கூறியுள்ளது.
அவர் BSN Tech Engineering நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்தார் என்பது கூடுதல் தகவல்.
மேலும் அவர் ஸ்டார் ரெடி-மிக்ஸ் நிறுவனத்தின் வேலையிடத்தில் பணிபுரிந்து வந்தார்.
மேலும் அங்கு அனைத்து வாகன செயல்பாடுகளையும் நிறுத்துமாறு ஸ்டார் ரெடி-மிக்ஸ் நிறுவனத்திற்கு MOM அறிவுறுத்தியுள்ளது.
இறந்தவர் குறித்த தகவலை கேட்டுவருகிறோம். விரைவில் முழு விவரம் பதிவு செய்யப்படும்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
லிட்டில் இந்தியாவில் போலீசிடம் வம்பு, ஆயுதத் தாக்கில் பங்கு.. குற்றத்தை ஒப்புக்கொண்ட ஊழியர்