‘திருச்சி வழியாக திருப்பதி மற்றும் சிங்கப்பூர் இடையே விமான சேவை’- இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Photo: IndiGO Official Twitter Page

இண்டிகோ ஏர்லைன்ஸ் (IndiGo Airlines) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி வழியாக திருப்பதி மற்றும் சிங்கப்பூர் இடையே வரும் ஜனவரி 18- ஆம் தேதி முதல் இரு மார்க்கத்திலும் விமான சேவை வழங்கப்படும். இந்த வழித்தடத்தில் வாரத்தில் செவ்வாய் கிழமை, புதன் கிழமை, வெள்ளிக் கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்கள் விமான சேவை வழங்கப்படும். அதன்படி, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு 6E 35 என்ற பெயரில் இயக்கப்படும் விமானம், திருச்சியில் இருந்து திருப்பதிக்கு 6E 7068 என்ற பெயரில் விமானம் இயக்கப்படும்.

“$3,000 அபராதம் கட்ட ரெடினா போகலாம்”.. சிங்கப்பூரில் பைக் டாக்ஸி சட்டப்பூர்வமானதா? டெலிகிராமில் இயங்கி வரும் இரகசிய குழு!

அதேபோல், திருப்பதியில் இருந்து திருச்சிக்கு 6E 7067 என்ற பெயரில் இயக்கப்படும் விமானம், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு 6E 37 என்ற பெயரில் இயக்கப்படும். இதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. விமான பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி வழியாக விமானங்கள் இயக்கப்பட உள்ள நிலையில், சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு இந்த விமான சேவை மிக பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

“முழு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்” என்ற நிலையை தக்க வைக்க இது கட்டாயம்!

திருச்சி, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானங்களைத் தொடர்ச்சியாக இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.