இண்டிகோ திருச்சி – சிங்கப்பூர் விமான சேவையில் மீண்டும் மாற்றம்!

திருச்சிராப்பள்ளி – சிங்கப்பூர் இடையே நேரடி இண்டிகோ விமான சேவை இருந்து வந்தது. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்கள் இந்த சேவையை தொடர்ந்து வழங்கி வந்தது இண்டிகோ நிறுவனம்.

இதனை அடுத்து விமான சேவையை மீண்டும் வாரம்தோறும் அனைத்து நாட்களிலும் இயங்கக்கூடிய தினசரி சேவையாக மாற்றி இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விமான சேவை இனி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளிலும் உண்டு, என அந்நிறுவனம் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி கூறியுள்ளது.

இந்திய நேரப்படி வாரந்தோறும் மதியம் 2 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்படும் இண்டிகோ விமானம் திருச்சியை மாலை 3.55 க்கு சென்றடைகிறது.

அதே போல் திருச்சியில் இருந்து மாலை 6.40 புறப்படும் விமானம் இரவு 1.45 க்கு சிங்கப்பூரை வந்தடையும்.

இந்த தினசரி சேவை ஜூலை 2 ஆம் தேதியில் இருந்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது.