சிங்கப்பூர் வழித்தடங்களில் புதிய சர்வதேச விமானங்களை அறிவித்துள்ளது இண்டிகோ நிறுவனம்!

Photo: Indigo Airlines

இண்டிகோ நிறுவனம் புதிய சர்வதேச விமானங்களை அறிவித்துள்ளது. இந்த விமானத்தைப் பற்றி இண்டிகோ நிறுவனம் கூறுகையில், புதிய மற்றும் குறைந்த விலையில் பயணம் செய்ய விருப்பப்படும் பயணிகளுக்கு ஏற்றவாறு அமையப்பெற்றுள்ளதாக கூறியுள்ளது.

பயணிகள் ஏற்றிச்செல்லும் இண்டிகோவின் புதிய சர்வதேச விமானங்கள் ரூ.8,499 என்ற அனைத்து தொடக்க விலையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இடைவிடாத விமானங்கள் மும்பை-சிங்கப்பூர் மற்றும் மும்பை-பாங்காக் வழித்தடங்களில் இயக்கப்படும், இது ஆகஸ்ட் 22, 2019 முதல் தொடங்கும் என்று விமான நிறுவனம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

6E0019 வகை விமானம் தினந்தோறும் ( ஞாயிறு தவிர) மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படும். இதற்கான கட்டணம் இந்திய மதிப்பில் 9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மற்றும் குறைந்த விலையில் பயணம் செய்ய விருப்பப்படும் பயணிகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழித்தடங்களில் செல்லும் விமானங்களுக்கு முன்பதிவு உடனடியாக தொடங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இண்டிகோ நிறுவனம் மும்பை to துபாய், மும்பை to குவைத் மற்றும் டெல்லி to ஜித்தா வழித்தடங்களில் புதிய விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லி மற்றும் ஜித்தா இடையேயான கூடுதல் விமானங்கள் ஜூலை 25 முதல் தொடங்கும் மேலும் மும்பை மற்றும் குவைத் இடையேயான விமானங்கள் ஆகஸ்ட் 5 முதல் செயல்படும் மற்றும் ஜூலை 25 ஆம் தேதி முதல் மும்பை to துபாய் பாதையில் விமானம் தனது மூன்றாவது Frequency இல் சேர்க்கவுள்ளது. முன்பதிவு விமானத்திற்கான வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போது இண்டிகோ நிறுவனம் 200 க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டுள்ளது. இதில் 55 உள்நாட்டு இலக்குகளையும் மற்றும் 17 சர்வதேச இலக்குகளையும் இணைக்கிறது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.