தீயணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர் ! -மயங்கி விழுந்தவர் மரணித்ததாக அறிவிப்பு!

Firefighter unconscious after attending to Bukit Merah fire
SCDF

சிங்கப்பூரின் ஹென்டர்சன் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் முகநூலில் விவரங்களை பதிவிட்டுள்ளனர்.

91 ஹெண்டர்சன் சாலையில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள நான்காவது தளத்தில் தீப்பற்றியது.சம்பவம் குறித்து இன்று (8 டிசம்பர்) காலை 11.10 மணியளவில் தற்காப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கட்டுக்கடங்காத தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.புகை மண்டலமாக காட்சியளித்த குடியிருப்பில் தீ எரிந்து கொண்டிருந்தது.குடியிருப்பைச் சுற்றிலும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தீ மற்றும் புகை சூழ்ந்த குடியிருப்பில் வீரர்கள் துணிச்சலுடன் சென்றனர்.அப்போது தீயணைப்பு வீரர் ஒருவர் மயக்கமடைந்தார்.உடனடியாக,சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின்னர் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.