தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 10- ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சிங்கப்பூரில் உள்ள பிஜிபி அரங்கத்தில் (PGP Hall Office) இந்து அறக்கட்டளை வாரியமும் (Hindu Endowments Board), இந்து ஆலோசனை வாரியமும் (Hindu Advisory Board) இணைந்து தேநீர் விருந்தளித்தது. இந்த விருந்தில் அனைத்து மத தலைவர்கள், மலேசியர்கள், சிங்கப்பூரர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் துறை அமைச்சரும், இரண்டாவது சட்டத்துறை அமைச்சருமான எட்வின் டோங் (Mr Edwin Tong, Minister for Culture, Community and Youth and Second Minister for Law) கலந்துக் கொண்டார்.
விழாவில், ‘Hinduism in Singapore and the Hindu Endowments Board’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை அமைச்சர் எட்வின் டோங் வெளியிட, விழா குழுவினர் பெற்றுக் கொண்டனர். இந்த புத்தகத்தில் சிங்கப்பூரில் குடியேறியுள்ள இந்துக்களின் பாரம்பரிய கலாச்சாரங்கள், சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு விழாக்கள், காண கிடைக்காத அரிய வகை புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. சுமார் 320 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தில் கியூஆர் கோடு (QR Code) வசதியும் உள்ளது. கியூஆர்கோடை ஸ்கேன் செய்து, அரிய புகைப்படங்களின் தொகுப்பையும், அரிய வகை வரலாற்று விழாக்களையும் வீடியோ வழியாக காணலாம்.
work permit-ல் வேலைக்கு வந்த ஊழியர்: கடையில் சிறுமியிடம் சில்மிஷ வேலை – தட்டி தூக்கிய போலீஸ்
‘Inter Religious Organisation’ முயற்சியை அங்கீகரிக்கும் வகையில், அதன் தலைவருக்கு இந்து அறக்கட்டளை வாரியமும், இந்து ஆலோசனை வாரியமும் இணைந்து சுமார் 30,000 சிங்கப்பூர் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.