இன்று (08/03/2022) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (International Women’s Day) உலக தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் மகளிர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தனது சார்பாகவும் மற்றும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்.
சிங்கப்பூரில் 95- ஆக்டேன் பெட்ரோல் விலை உயர்வு!
அதிக பெண் எம்.பி.க்களை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது 26 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 3 பெண் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெண்களை நாடாளுமன்றம் கொண்டுள்ளது.
இது எங்கள் கொள்கைகளை வடிவமைப்பதில் நிச்சயமாக அதிக சமநிலை மற்றும் மாறுபட்ட முன்னோக்குகளைச் சேர்த்துள்ளது. அதிக அர்ப்பணிப்பு மற்றும் திறமையான பெண்களை நாங்கள் தொடர்ந்து தேடி வருகிறோம்.
சிங்கப்பூர் பெண்கள் மேம்பாடு (Singapore Women’s Development) குறித்த ஒரு வருட உரையாடல்களின் கருத்துக்களை அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. சிங்கப்பூர் பெண்கள் மேம்பாடு குறித்த வரவிருக்கும் வெள்ளை அறிக்கை, உரையாடல்களிலிருந்து வரையப்பட்ட திட்டங்களைக் கொண்டிருக்கும். அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பெண்களுக்கான சமத்துவ சமூகத்தை உருவாக்குவது என்பது ஒரு தொடர்ச்சியான செயலாகும். பெண்கள் மேலும் முன்னேற நாம் அனைவரும் முன்வர வேண்டும். ஒன்றிணைந்து, நியாயமான, மேலும் உள்ளடக்கிய சிங்கப்பூரை நோக்கிச் செயல்படுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து செல்லும் பயணிகளுக்கு தனிமை இல்லை – அறிவித்த நாடு!
அத்துடன் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எடுக்கப்பட்டக் குழு புகைப்படத்தையும் பிரதமர் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலானதையடுத்து நடைபெற்று வரும் மதிப்பீட்டு விவாதத்துக்கு இடையே நாடாளுமன்ற வளாகத்தில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக பதிவில் தெரிவித்துள்ளார்.