iPhone கைப்பேசிகளை அபேஸ் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

சிங்கப்பூரில் குறைந்த விலையில் iPhone வாங்க போறிங்களா? உஷார்
Pic: EverythingApplePro

சுமார் 25,000 க்கும் மேற்பட்ட iPhone கைப்பேசிகளை கையாடிய ஊழியர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லிம் ஜென் ஹீ என்ற முன்னாள் உதவி செயல்பாட்டு மேலாளருக்கு இன்று புதன்கிழமை 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்திய ஊழியர் வாகனம் மோதி மரணம் – வேலையிடத்தில் நடந்த சோகம்

அவர் அப்போது பணிபுரிந்த “பெகாட்ரான் சர்வீஸ் சிங்கப்பூர்” நிறுவனத்துக்கு அவர் செய்த கையாடல் காரணமாக 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (S$6.7 மில்லியன்) இழப்பு ஏற்பட்டது.

ஆகவே அந்நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி Apple நிறுவனத்திற்கு இழப்பீடு தொகையை கொடுக்க வேண்டியிருந்தது.

குற்றங்கள் நடந்த நேரத்தில், சிங்கப்பூர் மற்றும் ஆசியாவின் பிற நாடுகளில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் பழுதுபார்க்கும் சேவைகளை பெகாட்ரான் நிறுவனம் வழங்கி வந்தது.

51 வயதுமிக்க மலேசியரான லிம், இரு நம்பிக்கை துரோக குற்றச்சாட்டுகளுக்காக கடந்த மே மாதம் குற்றம் சாட்டப்பட்டார்.

இன்னொருவருடன் சேர்ந்துகொண்டு அவர் அந்த கையாடல் வேலையை செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் 58வது தேசிய தினம்: களைகட்ட போகும் கொண்டாட்டங்கள்… 5 முக்கிய இடங்கள் – விளையாட்டும் உண்டு