ஈரானில் நடு ரோட்டில் நடனமாடி அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்ட ஜோடி அந்நாட்டு போலீசாரிடம் பிடிபட்டுள்ளது.
இருவருக்கும் 20 வயது இருக்கும் என கணிக்கப்படுகிறது, இந்நிலையில் அந்த ஜோடிக்கு 10 ஆண்டுகள், 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் மீது விபச்சாரம் மற்றும் பிரசாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
டெஹ்ரானிலுள்ள அஸாதி கோபுரம் அருகே அவர்கள் நடனமாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர்கள் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு தடையும், நாட்டை விட்டு வெளியேற 2 ஆண்டு தடையும் விதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.