‘ItsRainingRaincoats’ ஏற்பாடு செய்திருந்த பஜார்……காய்கறிகள், பழங்கள், பேக் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டு மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!

'ItsRainingRaincoats' ஏற்பாடு செய்திருந்த பஜார்......காய்கறிகள், பழங்கள், பேக் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டு மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: ItsRainingRaincoats

 

சிங்கப்பூரில் உள்ள ‘ItsRainingRaincoats’ அமைப்பு சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து அவர்களை மகிழ்த்து வருகிறது. மேலும், இன்ப சுற்றுலாவிற்கும் ‘ItsRainingRaincoats’ அமைப்பு வெளிநாட்டு ஊழியர்களை அழைத்துச் சென்று வருகிறது. சிங்கப்பூரில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரின் ஆதரவுடன் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.

‘புதிதாக இரண்டு நகரங்களுக்கு விமான சேவை’- ஸ்கூட் அறிவிப்பு!

அந்த வகையில், கடந்த பிப்ரவரி 25- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ‘ItsRainingRaincoats’ அமைப்பு பஜார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த பஜார் நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்குவதற்காக ஜூஸ், காய்கறிகள், பழங்கள், பேக், குடைகள், பவர் பேங்க், சாக்லேட், ரைஸ் குக்கர் உள்ளிட்டவற்றை ‘ItsRainingRaincoats’ அமைப்பு வழங்கினர்.

'ItsRainingRaincoats' ஏற்பாடு செய்திருந்த பஜார்......காய்கறிகள், பழங்கள், பேக் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டு மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!

‘ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹா யாகம் நடைபெறும்’ என அறிவிப்பு!

இதனை சேகரித்துக் கொண்ட ‘ItsRainingRaincoats’ ஊழியர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கினர். காய்கறிகள், பழங்கள், வீட்டு உபயோகப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ந்தனர்.