பாடகரான ஜாக்சன் வாங் நேற்று மாலை சிங்கப்பூர் வந்தடைந்தார். அது அவருடைய ரசிகர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் சாங்கி விமான நிலைய முனையம் 3, ரசிகர்களின் வெள்ளத்தால் சூழப்பட்டது. ஜாக்சனைப் பார்க்க பலர் விடுப்பு எடுத்ததாகவும் அங்கிருந்த ரசிகர்கள் கூறினார்கள்.
இருப்பினும், இரவு 7:10 மணியளவில் Got7 இசைக்குழுவின் உறுப்பினரான ஜாக்சனை ரசிகர்கள் பார்ப்பதற்குள், அவர் விரைவாக வெளியேற்றப்பட்டார். இதனால் சம்பவ இடத்தில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்துடன் (STB) இணைந்து ஆகஸ்ட் 2 முதல் 10 வரை சிங்கப்பூரின் புத்துணர்ச்சியூட்டும் இடங்களைக் காண்பிப்பதற்காகவும், மார்க்யூ இரவு விடுதியில் பார்ட்டி நடத்தவும் ஜாக்சன் வாங் இங்கு இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. பாங்காக்கின் “The Voice Thailand” இல் Cruel மற்றும் Champagne Cool ஐ பாடி முடித்து விட்டு அவர் சிங்கப்பூருக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.