லிட்டில் இந்தியாவில் பாலியல் சேவை, அரை நிர்வாண மசாஜ் நடத்தி வந்த கணவன், மனைவிக்கு சிறை..!

பாலியல் சேவைகள், அரை நிர்வாண மசாஜ் நடத்தி வந்த கணவன் மற்றும் மனைவிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் ஒரு திருமணமான தம்பதியினர், ஹோட்டலில் ஸ்பா ஒன்றை நடத்தி வந்துள்ளனர், இதில் அரை நிர்வாண மசாஜ் மற்றும் பாலியல் சேவைகளை வழங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், உரிமம் இல்லாமல் மசாஜ் சேவைகளை வழங்கியதற்காக, 56 வயதான சூ கோன் யிங் என்பவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) அன்று இரண்டு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், அவரின் 62 வயதான கணவர் ஓங் ஹான் செங் என்பவருக்கும் இதே குற்றச்சாட்டுக்காக 10 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஓங், மசாஜ் ஸ்தாபனங்கள் சட்டத்தின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு தண்டனை பெற்ற குற்றவாளி என்பதால், அவருக்கு மேலும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் பணப்பரிமாற்றம், கணக்குகள் மற்றும் தளவாடங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் பணியமர்த்தல் ஆகியவற்றில் தனது மனைவிக்கு உதவி செய்து வந்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.