நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் ஜம் ஜம் உணவகத்தின் முன்னாள் இயக்குனர் இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு தனது கடை அருகே உள்ள போட்டி உணவகமான விக்டரியின் மேற்பார்வையாளருக்கு எதிரான தாக்குதலுக்கு மூளையாக அவர் செயல்பட்டதால் தற்போது சிறையில் உள்ளார்.
சிங்கப்பூரில் இதுவரை தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும் நபர்கள் உஷார்
தற்போது 52 வயதாகும் ஜாக்கீர் அப்பாஸ் கான், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மிரட்டல் மற்றும் கடும் செயலைச் செய்தது ஆகிய குற்றச்சாட்டு வழக்கு விசாரணை கோரி இருந்தார். இந்நிலையில், இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் ஜாக்கீர்.
இருப்பினும், புதிய ஆதாரங்கள் வெளிப்பட்டால் அவர் மீது மீண்டும் வழக்கு தொடர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 24, 2020 அன்று இரவு 7 மணியளவில் நார்த் பிரிட்ஜ் சாலையில் கடும் செயலைச் செய்ததாக ஜாக்கீர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொது இடங்களில் நிர்வாண காட்சி… டெலிக்ராம்ல பார்க்க கட்டணம் – சிக்கிய பெண்ணுக்கு அபராதம்