ஜாலான் புக்கிட் மேராவில் கத்திக்குத்து… ஆடவரை வளைத்து பிடித்தது போலீஸ்

Facebook/Ethan Lee YS

ஜாலான் புக்கிட் மேராவில் 75 வயது முதியவரை கத்தியால் தாக்கியதாக கூறப்படும் 50 வயதுமிக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் ஒருவருக்கொருவர் முன்பு அறிந்தவர்கள் என்று நம்பப்படுகிறது, இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (ஜூன் 29) காலை நடந்நதாக போலீசார் கூறியுள்ளனர்.

நேற்று புதன்கிழமை காலை 11.15 மணியளவில் பிளாக் 111, ஜாலான் புக்கிட் மேராவில் (Jalan Bukit Merah) நடந்த இந்த சம்பவம் குறித்து புகார் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட ஆடவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனை அடுத்து ஆபத்தான ஆயுதங்கள் கொண்டு தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதற்காக 50 வயதுமிக்க ஆடவர் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.