ஜப்பானின் நடந்த கோர விபத்தில் 41 வயதுமிக்க சிங்கப்பூர் பெண்ணும் அவரது நான்கு மாத பெண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹொக்கைடோவில் நேற்று ஜனவரி 10, செவ்வாய்க் கிழமை காலை 11:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
“Work permit வேலை கிடைத்தும் சிங்கப்பூர் வர முடியல” – காரணம் இது தான் ஊழியர்களே!
அவர்கள் சென்ற கார், டிரக்குடன் நேருக்கு நேர் மோதியதாக ஜப்பானிய செய்தி நிறுவனமான NHK தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் 44 வயதுமிக்க கணவர் மற்றும் அவர்களின் மூத்த மகள் ஆகியோர் இந்த விபத்தில் காயமடைந்தனர். அவர்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
அவர்கள் காரை வாடகைக்கு எடுத்து சென்றதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது.
விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து ஜப்பான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.