சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று (02/12/2021) காலை ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவை (Japanese Foreign Minister Hayashi Yoshimasa) தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினார்.
இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இன்று காலை ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா உடன் சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். வெளியுறவு அமைச்சராக பதவியேற்றதற்கு நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஹயாஷி- சான் (Hayashi-san) சிங்கப்பூரின் நீண்ட கால நண்பர், பல ஆண்டுகளாக எனது சக பணியாளர்கள் பலரைச் சந்தித்துள்ளார். நாங்கள் கடைசியாக 2016- ல் ஜப்பான் சென்றிருந்தபோது சந்தித்தோம்.
ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நெருங்கிய மற்றும் நீண்டகால கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன, இந்த ஆண்டு நமது இராஜதந்திர உறவுகளின் 55- வது ஆண்டு (55th Anniversary Of Our Diplomatic Relations) நிறைவாகும். இணைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் விதிகள் அடிப்படையிலான பலதரப்பு அமைப்பைப் பராமரித்தல் போன்ற துறைகளில் இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளில் எங்கள் ஒத்துழைப்பில் வலுவான வேகத்தைத் தொடர்வதற்கான வழிகளை ஹயாஷி- சானும், நானும் விவாதித்தோம்.
சிங்கப்பூர் நுழையும்/பயணிக்கும்/மாறும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் நாளை முதல் புதிய நடைமுறை!
COVID-19 தொற்றுநோயை எதிர்கொண்டாலும் கூட, நாம் ஒன்றாக இன்னும் நிறைய செய்ய முடியும். சிங்கப்பூர்- ஜப்பான் உறவுகளை வலுப்படுத்த ஹயாஷி- சானுடன் நெருக்கமாகப் பணியாற்றவும், விரைவில் அவரை சிங்கப்பூருக்கு வரவேற்கவும் எதிர்பார்க்கிறேன்”. இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.