இன்று The Cathayவிற்கு வெளியே கூட திட்டமிட்டிருந்தவரா நீங்கள், மறக்காமல் இந்த அறிவிப்பைப் படிக்கவும் !

jeff ng cancel busking perfomance

The Cathayக்கு வெளியே நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியை ஜூலை 9 அன்று தொடர்ச்சியாக 2வது வாரமாக ரத்து செய்தார் Busker Jeff Ng. சிங்கப்பூரில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 வழக்குகள் இருப்பதால், தனது இசை நிகழ்ச்சியை நிறுத்த முடிவு செய்ததாக அவர் கூறியுள்ளார். ஜூலை 8, இரவு 7:25 மணியளவில், தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் Ng இதை அறிவித்துள்ளார். பின்னர் அதே அறிவிப்பை ஜூலை 9ம் தேதி காலை ஃபேஸ்புக்கில்லும் வெளியிட்டார். மேலும் அதில் சிங்கப்பூரில் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக The Cathayக்கு வெளியே ஜூலை 9 ஆம் தேதி இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை தனது இசை நிகழ்ச்சியை நிறுத்த முடிவு செய்துள்ளார். வருங்காலத்தில் பொதுமக்களுக்காக நிகழ்ச்சிகளை நடத்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். நேஷனல் ஆர்ட்ஸ் கவுன்சிலின் இணையதளத்தின்படி, அவர் மீண்டும் ரத்து செய்யாவிட்டால், ஜூலை 16 ஆம் தேதி இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை அவரின் அடுத்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், சில நபர்கள் இந்த அறிவிப்பு பற்றி தெரியாமல் The Cathayக்கு வெளியே தென்பட்டனர். சமீபகாலமாக வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுகள் அவரைச் சூழ்ந்திருந்தாலும், அவர் பாடுவதைக் கேட்க விரும்புவதாக அவர்கள் கூறினர்.

ஜூன் 25 அன்று NGயின் கடைசி நிகழ்ச்சியின் போது அவரைப் பார்க்க சுமார் 4,000 பேர் The Cathayக்கு வெளியே கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.