“செம்ம ஹேப்பி” – சிங்கப்பூரில் 2023 முதல் இந்த ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்!!

job salary singapore
Unsplash

அடுத்த 2023ஆம் ஆண்டு முதல், சிங்கப்பூரில் நுழைவு நிலை (entry-level) கழிவு சேகரிப்பு ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை ஊதியம் படிப்படியாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 2028ஆம் ஆண்டில் ஊதியம் S$3,260ஆக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக மனிதவள அமைச்சகம் (MOM) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கு 2021இல் 330,000 சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை – 2ம் இடத்தில் இந்திய பயணிகள்

2023 முதல் 2028 வரை, ஊதிய உயர்வுகளின் ஆறு ஆண்டு கால அட்டவணையின் அடிப்படையின், 3,000 குடியிருப்பு கழிவு மேலாண்மை ஊழியர்கள் பயனடைவார்கள் என்று அமைச்சகம் கூறியது.

இந்த ஊதிய உயர்வு அட்டவணை ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதன் மறுஆய்வு 2025ல் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க நிலை ஊழியர்களுக்கு எதிர்பார்க்கப்படும் மாதாந்திர அடிப்படை ஊதியம் 2023ஆம் ஆண்டில், S$2,210 இலிருந்து 2028ல் S$3,260 ஆக உயரும், அதாவது 48 சதவீதம் உயரும்.

இதில் கூடுதலாக, ஊழியர்களுக்கு கட்டாய பயிற்சி தேவைகளும் இருக்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் போலீஸ் அதிரடி நடவடிக்கை: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 15 பேர் சிக்கினர்