ஜூலை 13- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி வழிபாடு!

Photo: Sri Mariamman Temple

சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இக்கோயில் 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது. மேலும், இக்கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board) கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.

அதிகரிக்கும் கடை விலை: வருத்தத்தில் வாடிக்கையாளர்கள்

விஷேச நாட்களில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பௌர்ணமி நாளன்று இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், ஜூலை 13- ஆம் தேதி புதன்கிழமை அன்று மாலை 08.30 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை நடைபெறவுள்ளது. இந்நாளில் பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம். http://smt.org.sg/Services/MassEvent என்ற கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்றும் அவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

சிங்கப்பூரில் Work pass அனுமதியை நீட்டித்து தர கோரிக்கை வைக்கும் ஊழியர்கள் – காரணம் என்ன?

கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். நேர்த்திக் கடனை செலுத்திட ஒருமுறை மட்டுமே பக்தர்கள் கோயில் வளாகத்தைச் சுற்றி வர முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். கோயிலில் பக்தர்கள் அமர்ந்து பௌர்ணமி வழிபாட்டைப் பார்வையிடலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.