சிங்கப்பூரில் உள்ள 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Avenue 2) பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாளை (26/07/2022) மாலை பிரதோஷ பூஜை நடைபெற உள்ளது. ஜூலை 26- ஆம் தேதி அன்று மாலை 04.20 PM மணி முதல் மாலை 05.45 PM மணி வரை, எந்நேரமும் 200 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
அபிஷேக பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் என்ற இணையதளப் பக்கத்தில் பதிவுச் செய்துக் கொள்ளலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேகப் பொருட்களையும், வில்வ அர்ச்சனையையும் செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையைப் பார்க்க முடியும்.
திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களின் பட்டியல்!
கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையையும் நாடுகிறோம். கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயில் அலுவலகத் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். இந்த தகவலை இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.