சிங்கப்பூரில் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இக்கோயில் 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Avenue 2) அமைந்துள்ளது. இந்த கோயிலில் விஷேச நாட்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் சுவாமி சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நாள்தோறும் 100- க்கும் மேற்பட்டோர் இந்த கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வர். குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வரும் ஜூன் 12- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெறவுள்ளது. அன்று மாலை 04.20 மணி முதல் மாலை 05.45 மணி வரை, எந்நேரமும் 200 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
அபிஷேகப் பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையைச் செலுத்திவிடுவார்கள்.
பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷப் பூஜையைப் பார்க்க முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். இந்த மாற்றங்கள் தொடர்பில், உங்களது ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற கோயிலின் அலுவலக எண்ணைத் தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.