வெளிநாட்டவரிடம் கொள்ளையடித்த கும்பல் (வீடியோ): 4 வெளிநாட்டவர் உட்பட 6 பேருக்கு கொள்ளையில் தொடர்பு

robbery-jurong-point
Mothership reader

ஜூரோங் பாயிண்டில், சீன நாட்டவரிடம் கொள்ளையடித்ததற்காக சிங்கப்பூரர் ஒருவர் உட்பட ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மற்ற நான்கு பேரும் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னைக்கு விமானத்தில் பயணித்த பயணி நடுவானில் உயிரிழந்த சோகம்

கொள்ளையில் ஈடுபட்ட ஆறாவது நபர் மீது இன்னும் குற்றஞ்சாட்டப்படவில்லை, மேலும் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை என்று ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட 39 வயதான நபரிடம் அந்த குழு கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியுள்ளது.

அதன் பின்னர், கடந்த ஜனவரி 17 அன்று ஜூரோங் பாயிண்டில் உள்ள சப்வேயில், பாதிக்கப்பட்டவரின் இருந்து S$30,200 ரொக்கம் அந்த குழுவால் பறிக்கப்பட்டது.

கொள்ளை, தானாக முன்வந்து காயப்படுத்தியதாக அந்த ஐந்து பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் DBS வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு