ஜூரோங் வட்டாரத்தில் வசிக்கும் முதியோர் மற்றும் வறியோர்களை ஒன்று திரட்டி வருமானப் பிரச்சினைகளையும்,வயது முதிர்ச்சி பிரச்சினைகளையும் சமாளிக்க உதவ முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜூரோங் ஸ்பிரிங் வட்டாரம் முதியோருக்கு உதவுவதுடன் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உணவு ,மளிகைப் பொருள்களை கொடையாக வழங்கும்படி வசதி படைத்தவர்களை திரட்டி கோரிக்கை விடுத்துள்ளது.அம்முயற்சிகளின் ஒரு பகுதியாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி,எண்ணெய்,மைலோ,காய்கறிகள் போன்றவை ஜூரோங் சமூக மன்றத்தில் நேற்று வழங்கப்பட்டன.
முதியவர்களுக்கு உணவை வழங்கவும்,அவற்றை வீட்டுக்கு கொண்டு செல்லவும் சேவையாளர்கள் உதவினர்.துணைப் பிரதமர் லாரன்ஸ் ஓங் இயோ சூ காங் இப்பகுதிக்கு வருகை மேற்கொண்டதை அடுத்து ,இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அமைச்சர் வருகைகள் கடந்த மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது.