ComfortDelGro டாக்ஸி, மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லாரியில் இடையில் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நேற்று அக்.7 ஆம் தேதி காக்கி புக்கிட் அவென்யூ 4ல் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
SG Road Vigilante மற்றும் Beh Chia Lor என்ற Facebook பக்கங்களின் பதிவுகளின்படி, இந்த விபத்து Tampines Avenue 1 நோக்கி செல்லும் பார்ட்லி வயடக்டில் சாலையில் பாரிய போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.
வேலையின்போது உயிரிழந்த இந்திய ஊழியர் – அஜாக்கிரதையாக செயல்பட்ட நிறுவனத்துக்கு S$250,000 அபராதம்
அன்று மதியம் 1:40 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) உறுதிப்படுத்தியது.
காரின் ஓட்டுநர் இருக்கையில் ஓட்டுநர் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி SCDF அந்த நபரைக் காப்பாற்றியது.
அவருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல SCDF மறுத்துவிட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய மற்றொரு நபர் சாங்கி பொது மருத்துவமனைக்கு (CGH) கொண்டு செல்லப்பட்டார்.
வேலையிடத்தில் லாரி மோதி கொடூர விபத்து – ஊழியர் சிகிச்சை பலனின்றி மரணம்